பெரம்பலூர், ஆக. 26:ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாக தொடங்க தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.பெரம்பலூர்  அருகேயுள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற பெரம்பலூர்,  அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டக்  குழுக் கூட்டத்தில், பெருமன்ற மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ். சிவா  பேசியது:பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தனியார்  சிமென்ட் ஆலை, சர்க்கரை ஆலைகளில் பணிபுரிய உள்ளூர் இளைஞர்களுக்கு  வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத் திட்டத்தை உடனடியாகத் தொடங்குவதுடன், அதில்,  அரியலூர் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தர வேண்டும்.போக்குவரத்து  நெரிசலால் அவதிப்படும் ஓட்டுநர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அணைக்கரை  பாலத்தை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளி, கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும். கோவையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டில் திரளாகப் பங்கேற்க  வேண்டும் என்றார் அவர்.கூட்டத்துக்கு பெருமன்றத்தின்  பெரம்பலூர் மாவட்டச் செயலர் அ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள்  பி. ரமேஷ், டி. ரமேஷ், நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால், தா.பழூர் ஒன்றியச்  செயலர் எஸ். ராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழுச்  செயலர் வீ. ஞானசேகரன், ப. நிக்கோலஸ், கல்யாணசுந்தரம், பார்த்தீபன்,  எஸ்.ஆர். மகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நன்றி :   தினமணி  
Source:http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Edition-Trichy&artid=294070&SectionID=138&MainSectionID=138&SEO=&Title=%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%87%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
 
 
 
 

 காஞ்சிபுரம்,  ஆக.20:  இலவச மின்சாரம், பழைய மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் என்று  விவசாயிகளுக்கு வழங்கப்படும் எந்தச் சலுகைகளும் இல்லாமல் டீசல் என்ஜினை  பயன்படுத்தும் விவசாயிகள் தவித்து வருகின்றனர். ÷காஞ்சிபுரம்  மாவட்டத்தில் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் பெருகி வருகின்றன.  இந்நிலையில் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு  விற்றுவிட்டு வேறு தொழிலுக்கு மாறிவருகின்றனர். பாரம்பரியமான விவசாயத்  தொழிலை விடமுடியாமலும், விட மனமில்லாலும் பல விவசாயிகள் விவசாயத்தை  தொடர்ந்து வருகின்றனர். ÷மாவட்ட நிர்வாக கணக்கின்படி காஞ்சிபுரம்  மாவட்டத்தில் 1,45,966 ஹெக்டேரில் நெல் விவசாயமும், 7,586 ஹெக்டேரில்  கரும்பு விவசாயமும், 28,766 ஹெக்டேரில் வேர்கடலை விவசாயமும் நடைபெறுகிறது.  இதில் மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்  வழங்கப்பட்டது. ஏற்கெனவே மின்மோட்டார் வைத்திருந்த விவசாயிகளும் லாபம்  அடைந்தனர். இதனைத் தொடர்ந்து டீசல் என்ஜின் வைத்திருந்த பல விவசாயிகள் |50  ஆயிரம், | 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி புதிய மின் இணைப்புகளை பெற்றனர்.  இப்போது மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு புதிய மோட்டாரும்  வழங்கப்பட உள்ளது. ÷ஆனால் | 50 ஆயிரம் செலுத்த முடியாமல் இலவச மின்  இணைப்புக்கு விண்ணப்பித்துவிட்டு இன்னும் ஏழை விவசாயிகள் ஊருக்கு  ஒன்றிரண்டு பேர் காத்துக் கிடக்கின்றனர். இவர்கள் டீசல் என்ஜினை வைத்துக்  கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். ÷அடிக்கடி டீசல் விலை  உயரும்போது இந்த விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கெனவே  விவசாயத்தில் லாபகரமான சூழல் இல்லாத நிலை உள்ளது. இந் நிலையில் டீசலை  என்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவு இன்னும் கூடுதல்  ஆகிறது. ÷மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகளைப் போல் டீசல்  என்ஜின் வைத்திருக்கும் விவசாயிகளுக்கும் அரசு உதவ வேண்டியது அவசியம்.  இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். அல்லது உடனடியாக மின்  இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே மீனவர்களுக்கு டீசல்  மானியம் வழங்கப்படுவதுபோல் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்கின்றனர்  இவர்கள். ÷இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் இயக்கத்தின் மாநில  அமைப்பாளர் த.தமிழினியனிடம் கேட்டபோது அவர் கூறியது: டீசல் என்ஜின்  வைத்துக் கொண்டு விவசாயம் செய்யும் விவசாயிகளை டீசல் விலையேற்றம் கடுமையாக  பாதித்துள்ளது. அவர்களுக்கு ரேஷன் கார்டு போல் ஒரு அட்டை வழங்கி எவ்வளவு  நிலம் வைத்துள்ளனர் என்ற அடிப்படையில் மானிய விலையில் டீசல் வழங்க  வேண்டும். ÷இப்போது மின்சாரத் தட்டுப்பாடு உள்ளது. இதுபோன்ற டீசல்  என்ஜினை வைத்துள்ள ஏழை விவசாயிகளுக்கு சூரிய ஒளியில் இயங்கக் கூடிய மின்  மோட்டார்களை சாத்தியமுள்ள இடத்தில் வழங்க அரசு முன்வர வேண்டும். இதனால்  மின்சாரம் இல்லாத நேரத்திலும் மோட்டாரை இயக்க முடியும் என்றார்.
நன்றி :  தினமணி  
Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=290369&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=