வெள்ளி

விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி

அரியலூர்,​​ ஜன.​ 6:​ விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் த.​ ஆபிரகாம் தெரிவித்தார்.

​ ​ ​ இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

​ ​ ​ ​ தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரமயமாக்கல் பயிற்சி அளிக்க கீழ்க்கண்ட தலைப்புகளில் இருவாரப் பயிற்சி ஜனவரி 3-வது வாரம் முதல் அரியலூர் ​ மாவட்டத்தில் 40 பேருக்கு நடைபெற இருக்கிறது.

​ ​ ​ பவர் டில்லர் இயக்குதல்,​​ பராமரித்தல்,​​ மேலாண்மை பயிற்சி,​​ பம்ப் செட்டு,​​ சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனக் கருவிகள் பற்றிய பயிற்சி ஆகிய பயிற்சிகளில் சேர,​​ 18 வயது முதல் 40 வயது வரையிலான விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.​ பயிற்சியில் சேரும் விவசாயிகளுக்கு அரசு விதிகளின் படி,​​ பயிற்சி முடிவின் போது உதவித் தொகை,​​ சான்றிதழ் வழங்கப்படும்.

​ ​ ​ ​ அரியலூர் பகுதிகளிலுள்ள விவசாயிகள் அரியலூர் அண்ணாநகரில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும்,​​ ஜயங்கொண்டம் பகுதிகளிலுள்ள விவசாயிகள் ஜயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் உள்ள

வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.
 
நன்றி:தினமணி
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக