வியாழன்

முந்திரியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்...

பண்ருட்டி, மார்ச் 31:   முந்திரி உற்பத்தி குறைவுக்கான முக்கிய காரணங்களை கண்டறிந்து, நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக அளவு மகசூலை பெறலாம் என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 
பண்ருட்டி வட்டத்தில் சுமார் 16,900 ஹெக்டேர் நிலப்பரப்பில் உள்ள முந்திரி காடுகளில் இருந்து சுமார் 12 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி கொட்டை உற்பத்தி செய்யப்படுகிறது.   முந்திரியில் அதிக மகசூல் பெறுவது குறித்து தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளது:  விதை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட தோப்புகள், வயதான மற்றும் உற்பத்தி திறன் குறைந்த தோப்புகள் இருத்தல், மண் வளம், மரங்களை பராமரிப்பு செய்தல் குறைவு, உரமிடாமை, பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொள்ளாமையால் முந்திரி உற்பத்தி திறன் குறைகிறது.  
முந்திரியில் அதிக அளவு மகசூல் இழப்பை ஏற்படுத்தக்கூடியது தேயிலைக் கொசு பூச்சியாகும். இப்பூச்சியால் 25 சதவீதம் தளிர், 30 சதவீதம் பூங்கொத்து மற்றும் 15 சதவீதம் இளங்கொட்டை பருவங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. 
முந்திரி பிஞ்சுவிடும் பருவத்தில் கார்பரில் 50 சதவீதம் நனையும் தூள் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.0 கிராம் வீதம் கரைத்து, இலைகள் நன்றாக நனைந்து ஒழுகும்படியும், உள்வாட்டத்தில் சிம்புகளிலும், கிளைகளிலும் பரவலாக தெளிக்க வேண்டும். 
எக்காரணம் கொண்டும் பைரித்திராய்டு மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்தக் கூடாது என பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநர் வி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
 
நன்றி:தினமணி
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக