செவ்வாய்

மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை. அரியலூரில் இந்திய ஜனநாயக கட்சி உண்ணாவிரதம்

அரியலூர், நவ.9-
அரியலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் உண்ணாவிரத பேராட்டம் நடந்தது. 60 வயதுக்கு மேற்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், பள்ளி குழந்தைகள் கடத்தலை தடுப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வந்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
ஜெயங்கொண்டம் அனல்மின் நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்டும். கீழபழூர் பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரியை உடனே தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பொருளாளர் அழகுமுத்து, இளைஞர் அணி செயலாளர் ரமணிகுமார் மகளிரணி செயலாளர் மாலதி மற்றும் மகாதேவன், கலியமூர்த்தி, சின்னப்பன், கணேசன் உள்பட சுமார் 300 பேர் கலந்து கொண்டார்கள்.


நன்றி  :மாலைமலர் 
Source: http://www.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக