வியாழன்

முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்



தமிழகத்தில் முந்திரி ஒரு பணப்பயிராக சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும் முந்திரிபருப்பு மட்டுமே அதிக வர்த்தக வாய்ப்புள்ள பொருளாக விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிப்பழம் குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் நிலையே நடைமுறையில் காணப்படுகிறது. இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் மதிப்பு கூடிய பொருள்களான முந்திரி மிட்டாய், முந்திரி ஊறுகாய், முந்திரிஜாம் உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்.
முந்திரி ஆப்பிள்: முந்திரியின் பழத்தை பல மாநிலங்களில் "முந்திரி ஆப்பிள்' என்ற பெயரில் அழைக்கின்றனர். முந்திரி பழம் வெகு வேகமாக பதப்படுத்தப்படுவதால் கெட்டுவிடும் தன்மை கொண்டது.
இத்தகைய சூழலில் முந்திரி பழத்தில் இருந்த தயாரிக்கப்படும் மதிப்பு கூடிய பொருள்களை பல மாதங்களுக்கு கெட்டுப் போகாமல் வைத்து ஒரு நுகர்வு
உணவு பொருளாக விற்பனை செய்ய முடியும்.
முந்திரி ஆப்பிள் மிட்டாய்: விவசாயிகள் நல்ல தரமான அழகான முந்திரி ஆப்பிள் பழங்களை மிட்டாய் தயாரிக்க தேர்வு செய்து கொள்ள வேண்டும். பின்னர் மேல் தோலை நன்றாக அகற்றிவிட்டு சர்க்கரை கரைசலில் நன்றாக வேக வைக்க வேண்டும். ÷மிருதுவான தன்மையை அடைந்தவுடன் மேலும் சர்க்கரை கரைசலின் அடர்தன்மை அதிகரிக்கச் செய்ய வேண்டும். பின்னர் இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆப்பிள் மிட்டாயை 2 வார கால அளவில் சர்க்கரை நீர் வடியும் வரை காய வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்க 2 அல்லது 3 வார காலமாகும்.
ஒரு கிலோ முந்திரி பழத்திலிருந்து 745 கிராம் வரை முந்திரி ஆப்பிள் மிட்டாயை தயாரிக்க முடியும். அதிகளவு வைட்டமின்-சி சத்துக்கள் கொண்ட முந்திரி ஆப்பிள் முட்டாய் 50 கிராமின் விலை ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரிஜாம்: முந்திரி பழங்களை நன்றாக கழுவி உப்பு கரைசலில் 2 அல்லது 3 நாள்களுக்கு முக்கி மேல் தோலை அகற்றிவிட வேண்டும். பின்னர் முந்திரி பழத்தை நன்றாக தண்ணீரில் கழுவி, வேக வைத்து கூழாக மாற்றி மாம்பழ கூழ் உடன் கலக்க வேண்டும்.
பின்னர் போதுமான சர்க்கரை மற்றும் சிட்ரிக் அமிலம் கலந்து முந்திரி ஜாம் தயாரிக்கலாம். அதிகளவு வைட்டமின் "சி' சத்துள்ள முந்திரி ஜாமை ஆறுமாத காலம் வரை வைத்து விவசாயிகள் சந்தைகளில், வணிக வளாகத்தில் விற்பனை செய்ய முடியும். தற்போது 350 கிராம் கொண்ட முந்திரி ஜாம் ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
முந்திரி ஊறுகாய்: நன்றாக முற்றிய முந்திரி பழங்களை தோட்டத்திலிருந்து விவசாயிகள் காய் மற்றும் பூக்களை சேதப்படுத்தாமல் பறிக்க வேண்டும். பின்னர் நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர் உப்பு கரைசலில் போட்டு நன்றாக மூழ்க செய்ய வேண்டும். இதனால் சில கசப்புகள் மற்றும் வாசனைகள் வெளியேறிவிடும். பின்னர் உப்பு கரைசலில் இருந்து பழத்துண்டுகளை எடுத்து மீண்டும் நன்றாக கழுவி, ஊறுகாய் செய்வது போல் மஞ்சள் பொடி, மிளகாய்பொடி, பூண்டு, கொத்தமல்லியை சேர்த்து எண்ணெய்யில் ஊறுகாய் தயார் செய்ய வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்படும் முந்திரி ஊறுகாய் 250 கிராம் ரூ.25 வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
பயிற்சி: ""முந்திரி மதிப்புக்கூடிய பொருள்களை தயாரித்து விற்பனை செய்ய தொழில்நுட்ப பயிற்சிகள் மேற்கொள்ள விரும்பும் மகளிர் சுய உதவிக்குழுவினர், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர் கேரளத்தில் உள்ள முந்திரி ஆராய்ச்சி நிலைய உற்பத்திக் கூடத்தை அணுகலாம்'' என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத் துறை விரிவுரையாளர் தி.ராஜ்பிரவீன் தெரிவிக்கிறார்.
÷தொடர்பு முகவரி: இயக்குநர், முந்திரி ஆராய்ச்சி நிலையம், மடக்கத்தரா, கேரளா-680651.
நன்றி:தினமணி
Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Chennai&artid=206178&SectionID=97&MainSectionID=97&SEO=&Title=முந்திரி ஊறுகாய் தயாரித்தால் லாபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக